பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் உற்சவம் ஆரம்பம்
முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது பாரம்பரிய முறைப்படி கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு உற்சவம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் ஆலய வளாகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அதிகாலை 3 மணியளவில் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு பொங்கல் உற்சவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 9ஆம் திகதி பிரதேச செயலகத்தினால் குறித்த உற்சவத்தில் 10 பேர் மாத்திரமே கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
