அதிகரிக்கும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள்
தற்போது வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோத உள்ளூர் இழுவைமடி தொழில் இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகளை பதிவு செய்தும் எந்தவிதமான பதிலும் இல்லை என நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழிலாளர் பிரச்சினைகள்
சட்டவிரோத உள்ளூர் இழுவைமடி தொழில் குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல்துறை அமைச்சருக்கு வழங்கியும் எந்தவிதமான பதிலும் இல்லை.
இதனால் கடற்றொழில் சமூகம் தொடர்ந்தும் பாதிக்கப்படுகிறது.
கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு எவரும் இல்லை.
மேலும், கடற்றொழில் அமைச்சர் கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகள் தொடர்பாக எதுவும் பேசுவதில்லை என்றும், தெரிவித்ததுடன் தமிழ் மக்களின் அசரியல் அபிலாசைகளை வென்றெடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan