அலரி மாளிகையில் இடம்பெற்ற நவராத்திரி விழா! சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்பு
அலரி மாளிகையில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி ( Subramanian Swamy) கலந்துகொண்டிருந்தார்.
இந்நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றிருந்தது. இதில் பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), பிரதமரின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச (Shiranthi Rajapaksa) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
முன்னதாக இன்று காலை இலங்கை வந்த சுப்பிரமணியன் சுவாமியை இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக(D.V.CHanaka) மற்றும் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) ஆகியோர் வரவேற்றனர்.
இந்நிலையில், இன்று மாலை அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழாவில் அவர் கலந்துகொண்டிருந்தார்.
இதேவேளை, இலங்கை இராணுவத்தின் 72வது நிறைவையொட்டி நடத்தப்படும் இராணுவ கருத்தரங்கிலும் அவர் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.