நாயாறு கடற்பரப்பில் கவிழ்ந்த கடற்படை படகு
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயாறு கடற்பரப்பில் கவிழ்ந்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாயாறு கடற்படை முகாமிலிருந்து கடலுக்குச் சென்ற குறித்த கடற்படை படகு நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் கடற்சீற்றம் காரணமாகக் கவிழ்த்துள்ளது.
சட்டவிரோத மீன்பிடி படகுகளைக் கண்காணிக்கவென கடலுக்குச் சென்ற குறித்த கடற்படை படகு கடற்சீற்றம் காரணமாகக் கவிழ்த்துள்ளது.
இந்த படகில் மூன்று கடற்படையினர் பயணம் செய்த நிலையில் படகு கவிழ்ந்ததும் ஒருவர் நீந்திக் கரைசேர்ந்துள்ளதோடு மற்றைய இருவரும் வேறொரு படகொன்றின்மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த கவிழ்ந்த படகு கடற்படையினர் மற்றும் கிராம மீனவர்களின் ஒத்துழைப்புடன்
கரைக்குக் கொண்டுவர முயற்சி செய்யப்பட்ட போதும் கடற்படை படகு சிதைந்து
சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ Cineulagam
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam