நாயாறு கடற்பரப்பில் கவிழ்ந்த கடற்படை படகு
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயாறு கடற்பரப்பில் கவிழ்ந்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாயாறு கடற்படை முகாமிலிருந்து கடலுக்குச் சென்ற குறித்த கடற்படை படகு நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் கடற்சீற்றம் காரணமாகக் கவிழ்த்துள்ளது.
சட்டவிரோத மீன்பிடி படகுகளைக் கண்காணிக்கவென கடலுக்குச் சென்ற குறித்த கடற்படை படகு கடற்சீற்றம் காரணமாகக் கவிழ்த்துள்ளது.
இந்த படகில் மூன்று கடற்படையினர் பயணம் செய்த நிலையில் படகு கவிழ்ந்ததும் ஒருவர் நீந்திக் கரைசேர்ந்துள்ளதோடு மற்றைய இருவரும் வேறொரு படகொன்றின்மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த கவிழ்ந்த படகு கடற்படையினர் மற்றும் கிராம மீனவர்களின் ஒத்துழைப்புடன்
கரைக்குக் கொண்டுவர முயற்சி செய்யப்பட்ட போதும் கடற்படை படகு சிதைந்து
சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 2 மணி நேரம் முன்
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam