நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கை : 49 பேர் கைது
நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகின்ற விசேட நடவடிக்கையில் 34 சந்தேகநபர்கள் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டதாக கரையோர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுடன் 13 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள்
குற்றத்தடுப்பு விசேட கடமையின் கீழ் கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் ஜம்பட்டா போதிக்கு அருகில் உள்ள வீதியை மூடி சுமார் 2 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விசேட நடவடிக்கைக்காக, எட்டு பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் முப்பது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் போதைப்பொருள் கையாள்வதில் விசேட பயிற்சி பெற்ற பொலிஸ் அதிகாரிகளும் ஈடுபட்டிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan