நாடளாவிய ரீதியில் பதிவான குற்றச்செயல்களும் அதனோடு இணைந்த கைது நடவடிக்கையும் (Photos)

Anuradhapura Jaffna Sri Lanka Police Investigation
By Aanadhi Mar 18, 2023 09:18 PM GMT
Report

நாடளாவிய ரீதியில் பல குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பொலிஸாரும் தீவிர விசாரணைகளை முன்னெடுப்பதோடு சந்தேகநபர்களையும் கைது செய்து வருகின்றனர்.

காலிமுகத்துவாரப் பகுதி

காலிமுகத்துவாரப் பகுதியில் நேற்றிரவு (17.3.23) 69 லட்சத்து 49 ஆயிரத்து ஐநூறு ரூபா பணத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலிமுகத்திடல் பகுதியில் பொலிஸாரின் சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொள்ளுப்பிட்டியிலிருந்து கோட்டை நோக்கிச் சென்ற சிறிய ரக லொறியை வீதி சோதனை சாவடியில் கடமையாற்றியிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நிறுத்தி சோதனையிட்ட போது சாரதி இருக்கைக்கு அருகில் துணிப் பையொன்றில் பெருமளவிலான நாணயத் தாள்கள் இருப்பதைக் கண்டு சாரதியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பதிவான குற்றச்செயல்களும் அதனோடு இணைந்த கைது நடவடிக்கையும் (Photos) | Nationally Reported Crime Sri Lanka Today

அதன் போது சாரதி தான் ஒரு மீன் வியாபாரி என்றும் மீன் விற்பனை செய்த பணமே அது என்றும் தெரிவித்துள்ளார் எனினும் பொலிஸார் அவரை கீழிறக்கி லொறியை மீண்டும் ஆராயத் தொடங்கியுள்ளனர்.  அப்போது, ​​சாரதி பயந்து, மற்றொரு நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த தொகையில் 5 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு, தன்னை விடுவிக்கும்படி, பொலிஸ் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்போது அவர் மேல் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது அதனையடுத்து, லொறியை பொலிஸ் நிலையம் கொண்டு வந்த பின்னர், பொலிஸ் மோப்ப நாய் கொண்டு லொறி பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதன்போது சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பயணித்த லொறியின் இருக்கைக்கு அடியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் 3 கிராம் 340 மில்லிகிராம் எடையைக் கொண்டிருந்தது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை வடக்கு, கல்பொட பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடம் தற்போதைக்கு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அநுராதபுரம்

பொலிஸாரிடம் இருந்து தப்பித்துக் கொள்ள குளமொன்றின் நீர்ப்பாசித் தாவரங்களுக்குள் மறைந்திருந்த இளைஞர் ஒருவர் பல மணிநேர முயற்சியின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம்- மிஹிந்தலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த இளைஞன் இன்று (18.3.2023) மிஹிந்தலை பொலிஸ் நிலையத்திற்கு வழக்கு ஒன்றின் இலக்கத்தை அறிந்து கொள்வதற்காக வந்துள்ளார்.

அப்போதுதான் நீதிமன்றம் தனக்கு எதிராக பிடியாணை பிறப்பித்துள்ள விபரம் அவருக்குத் தெரிய வந்துள்ளது.  அதனை அறிந்த இளைஞர் பொலிஸ் நிலையத்துக்கு வௌியில் உடனடியாக ஓடிவந்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் பதிவான குற்றச்செயல்களும் அதனோடு இணைந்த கைது நடவடிக்கையும் (Photos) | Nationally Reported Crime Sri Lanka Today

பொலிஸாரும் அவரை விடாமல் துரத்திக் கொண்டு ஓடிச்சென்றுள்ளனர். அதனையடுத்து நேரே வீதிக்கு ஓடிவந்த இளைஞர், மிஹிந்தலை பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள ஏரியில் குதித்து தப்பிச் சென்றுள்ள முயன்றுள்ளார்.

பின்னர், உடனடியாக அவ்விடத்துக்கு வந்த மிஹிந்தலை பொலிஸார், பல மணித்தியாலங்களின் பின்னர் பெரும் முயற்சியை மேற்கொண்டு ஏரியின் பாசிக்குள் மறைந்திருந்த சந்தேக நபரைப் பிடித்து கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் 

வடக்கு மாகாண ரீதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மூவரை இன்றையதினம் (18.3.2023) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காங்கேசன்துறை பிராந்திய மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஐ.பி. நிதர்சன் அவர்களது தலைமையின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால் சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் 22,24,26 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் வட்டுக்கோட்டை,சங்கானை,நாவற்குழி பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அளவெட்டி பகுதியில், கழுத்தில் கத்தியை வைத்து நகைகள் மற்றும் தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றமை தொடர்பில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது தொலைபேசி மற்றும் நகைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் போது அவர்களுக்கு எதிராக பல குற்றச்செயல் வழக்குகள் உள்ளதாக அறிய முடிகிறது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்.

அவர்கள் மூவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மானிப்பாய் 

மூன்று வாள்களுடன் ஐந்து சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிஸார் இன்று (18.03.23) கைது செய்துள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் தொடர்புபட்ட வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த வயதான இருவரை கைது செய்திருந்தனர்.

நாடளாவிய ரீதியில் பதிவான குற்றச்செயல்களும் அதனோடு இணைந்த கைது நடவடிக்கையும் (Photos) | Nationally Reported Crime Sri Lanka Today

இந்நிலையில் குறித்த இருவரிடம் முன்னெடுத்த விசாரணைகளின் போது சுடலையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாள் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்த நிலையில் மேலும் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மானிப்பாய் நகர் பகுதியில் உள்ள கம்மாலை ஒன்றில் வாளினை தயாரித்த அதன் உரிமையாளரை கைது செய்த நிலையில் குறித்த நபரிடமும் ஒரு வாளினை கைப்பற்றியிருந்தனர்.

இதேவேளை கம்மாலை உரிமையாளருக்கு உதவி புரிந்த இளைஞர் ஒருவரையும் வாள்வெட்டிற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளினை உதிரிப்பாகங்களாக்கி வெவ்வேறு பகுதிகளில் இட்ட ஒருவருமாக மொத்தமாக ஐந்து பேரையும் பொலிஸார் கைது செய்ததோடு வாள்வெட்டு சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.                                   

Gallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US