தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் சேவைகள் இடை நிறுத்தம்
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் வழங்கும் சேவைகள் நாளை (10) முதல் மீள் அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் வைத்திய கலாநிதி சவீந்திர கமகே தெரிவித்துள்ளார்.
நாட்டின் தொற்று நோயைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
அதன்படி, நாடு முழுவதும் உள்ள நிறுவனத்தின் பிரதான அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்கள் நாளை முதல் மூடப்படும்.
எவ்வாறாயினும், இணையம் மூலம் ஏற்கனவே தங்கள் திகதிகளையும் ,நேரங்களையும்
முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு சரியான நேரத்தில் முன்னேற்றம் குறித்து
அறிவிக்கப்படும் எனவும் கமகே கூறியுள்ளார்.