மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவராக நஸீர் அஹமட் நியமனம்
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவராக சுற்றாடல் அமைச்சர் பொறியியலாளர் நசீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக்கடிதத்தை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடமிருந்து அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
பொருளாதார பிரச்சினை
தேசிய அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைய மாவட்ட மட்டத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்தல், செயற்படுத்தல் மற்றும் கண்காணிப்பது மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாகும்.
மேலும், தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் மாவட்ட மட்டத்தில் பொதுமக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு அதிகாரம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |