ஏழு பேரை காவு கொண்ட நானுஓயா கோர விபத்து! பேருந்து சாரதிக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதி
நானுஓயா - ரதெல்ல குறுக்கு வீதியில் ஏற்பட்ட கோர விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதிக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்ததுடன் 50இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.
பிணை அனுமதி
இந்தநிலையில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதி இன்றையதினம் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, சந்தேகநபரை, 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.