வனப் பாதுகாப்பு வலயமாக மாற்றப்படும் நந்திக்கடல்: மஹிந்த அமரவீர
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு, நாயாறு மற்றும் நந்திக்கடல் உள்ளிட்ட பகுதிகளை வனப் பாதுகாப்பு வலயங்களாக நியமிப்பதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குளங்களை சுத்தம் செய்வதற்கான வழிமுறைகள்

மேலும் மாசடைந்த குளங்களை சுத்தம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ள நிலையில், பணிகளை துரிதப்படுத்துமாறு வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அமைச்சர் அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாயாறு மற்றும் நந்திக்கடல் குளங்கள்

மேலும், பல்வேறு மனித நடவடிக்கைகளால் நாயாறு மற்றும் நந்திக்கடல் குளங்கள் மாசுபடுவதாகவும், ஏராளமான கழிவுகள் அகற்றப்படுவதால் குளங்கள் நிரப்பப்படுவதால் சதுப்புநிலங்கள் மற்றும் குளத்தை சார்ந்த உயிரினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாகவும் வலியுறுத்தப்பட்டது.
இரண்டு தடாகங்களையும் பாதுகாப்பதற்கான உண்மைகளை ஆய்வு செய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சர் தீர்மானிக்கப்பட்டதுடன் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri