கைவிடப்படுகின்றாரா ரணில்..! சர்ச்சையை ஏற்படுத்தும் நாமல் ராஜபக்சவின் புகைப்படம்!!
நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தெரிவுக்கு மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி ரணில் விக்ரமசிங்கவுக்கே ஆதரவு தர இருப்பதாக பேசப்பட்டு வருகின்ற நிலையில், ரணிலுக்கு போட்டியாகக் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுகின்ற டலஸ் அழகப்பெரும உடன் நாமல் ராஜபக்ச இருப்பதான ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன, கஞ்சன விஜேசேகர, அசங்க செகான் சேமசிங்க போன்றவர்களுடன் ஜனாதிபதி வேட்பாளராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள டலஸ் அழகப்பெரும மற்றும் நாமல் ராஜபக்ச போன்றோரும் அமர்ந்திருந்து உரையாடுவது போன்று வெளியாகியுள்ள புகைப்படம் மக்கள் மத்தியில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது.
இலங்கையின் பதில் ஜனாதிபதியாகச் செயற்பட்டு வருகின்ற ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியில் நிலைக்க வேண்டுமானால் மகிந்தவின் மொட்டுக் கட்சி அவருக்கான ஆதரவை வழங்கினால் மாத்திரமே அது சாத்தியம்.

ஜி.எல்.பீரிஸ் முன்மொழிந்தது போன்று டலஸ் அழகப்பெருமவுக்கு மொட்டுக்கட்சி ஆதரவு வழங்குமாக இருந்தால், ரணிலினால் அந்தப் பதவியில் நிலைப்பது மிகவும் கடினம்.
தற்பொழுது சமூக வலைத்தளங்களில் உலவிவருகின்ற இந்தப் புகைப்படம், மொட்டுக்கட்சி டலஸ் அழகப்பெருமவை அடுத்த ஜனாதிபதி தெரிவுக்கு முன்னிலைப்படுத்துகின்றதா என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri