எந்தவித பாதுகாப்பும் இன்றி வெளியே சென்ற நாமல் - சந்திக்க சென்ற அதி முக்கிய பிரமுகர்
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தனது மனைவியுடன் நேற்று முன்தினம் கொழும்பில் உள்ள சினமன் லேக் ஹோட்டலில் உள்ள உணவகம் ஒன்றில் எவ்வித பாதுகாப்பும் இன்றி சாதாரண தம்பதியினர் போல் உணவருந்திக்கொண்டிருந்தனர்.
அமைச்சர் என்ற வகையில் கடும் பணி சுமையில் இருந்து சில மணி நேரம் விடுப்பட்டு, சுதந்திரமாக நாமல் ராஜபக்ச, சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, அங்கிருந்த ஒருவர், அமைச்சர் அங்கு இருப்பது பற்றி ஒருவருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த தகவல் கிடைத்ததும், அந்த அதிமுக்கிய பிரமுகர், நாமலை சந்திக்க அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அதிமுக்கிய நபருக்கான பாதுகாப்பு, பொலிஸ், தனிப்பட்ட பாதுகாப்பாளர்களுடன் ஆறு வாகனங்களுடன் குறித்த நபர் அமைச்சரை சந்திக்க சென்றுள்ளார்.
இதனால், முழு ஹோட்டலும் ஆட்டம் கண்டு போனதுடன் அந்த நபர் தொடர்பில் உஷார் நிலையில் இருந்தனர். அந்த அதிமுக்கிய பிரமுகர் அமைச்சர் நாமல் உணவருந்திக் கொண்டிருந்த மேசைக்கு அருகில் சென்றார்.
அத்துடன் நாமல் ராஜபக்சவுக்கு தெரியும்படி அந்த அதிமுக்கிய நபர் அமர்ந்திருந்தார்.
எனினும் அந்த நபர் பற்றி பெரிதாக கவனத்தில் கொள்ளாத நாமல், உணவருந்தி முடிந்த பின்னர், மேசையில் இருந்து எழுந்துச் செல்லும் போது, அந்த நபருக்கு அருகில் சென்று சில நிமிடங்கள் பேசி விட்டு, சாதாரணமாக தனது மனைவியை அழைத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நாமல் ராஜபக்ச நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர், அவரது தந்தை நாட்டின் பிரதமர், சித்தப்பா நாட்டின் ஜனாதிபதி. இப்படி இருக்கும் போது, அவர் தனிப்பட்ட பயணத்தை தனது வாகனத்தில் மனைவியுடன் எவ்வித பாதுகாப்பும் இன்றி சென்றிருந்தார்.
இவ்வாறான நிலையில், அவரை சந்திக்க ஆறு வாகனங்கள் மற்றும் பாதுகாவலர்கள் புடைசூழ சென்றிருந்த நபர் வேறு யாருமல்ல, கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அண்மையில் ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டு, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர். துமிந்த சில்வா (R.Duminda Silva) இதுதான் இவர்களுக்கு இடையிலான வித்தியாசம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.