நீதித்துறை குறித்து நாமல் விடுத்துள்ள கோரிக்கை
நீதித்துறையை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்குமாறு சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் முன்னணியில் உள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாமல் தெரிவித்தார்.
உளவுத்துறையின் அடிப்படையில்
குறிப்பிட்ட வழக்கு மற்றும் சம்பந்தப்பட்ட நபர் பற்றி முழு நாட்டிற்கும் தெரியும் என்று கூறிய அவர் நீதிபதிகளின் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களை அரசியலாக்குவதைத் தவிர்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
நீதிபதிகளின் இடமாற்றத்தில் அரசியலைக் கொண்டு வர வேண்டாம். பொலிஸ் துறை அரசியல்மயமாக்கப்பட்டது. இராணுவத்தை அரசியல்மயமாக்க முயற்சிகள் நடக்கின்றன.
விடுதலைப் புலிகளின் உளவுத்துறையின் அடிப்படையில் முன்னாள் கடற்படைத் தளபதி கைதுசெய்யப்பட்டார்.
வடக்கு மற்றும் கிழக்கில் சமீபத்தில் நடந்த கடையடைப்பின் போது அரசாங்கம் தனது சொந்தக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் - காலை திருவிழா




