ரக்பி விளையாடிய நாட்களில் நாமல் விட்ட தவறு! அபராதம் செலுத்தும் அரசாங்கம்
முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு உலக ரக்பி சம்மேளனம் விதித்த பெரிய அபராதத்தை இலங்கை இன்னும் செலுத்தி வருவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய(18.03.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச ரக்பி விளையாடிய நாட்களில் நடந்த ஒரு சம்பவம் காரணமாக உலக ரக்பி சம்மேளனம் அவருக்கு அபராதம் விதித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரிய அபராதம்
2014ஆம் ஆண்டு ஒரு ரக்பி போட்டியின் போது ஃபிஜிய வீரர்கள் விளையாட்டு விதிமுறைகளை மீறி போட்டில் கலந்துகொண்டனர்.
இதனால், அவர்கள் ஆண்டுக்கு 50,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள்(ஏறத்தாழ 20 கோடி இலங்கை ரூபாய்கள்) அபராதம் செலுத்தி வருவதாக சுனில் குமார சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
