அரச ஊழியர்கள் மீது கடுமையான அடக்குமுறை! கவலையில் நாமல்
அரச ஊழியர்கள் மீது கடுமையான அடக்குமுறையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தக் காலகட்டம் சவாலானது என்று அவர் கூறியுள்ளார். கண்டியில் ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு நடத்திய பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை பொலிஸ் பிரிவு முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
அதிக வரிச்சுமை
அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட அதிக வரிச்சுமையால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டிள்ளார்.

நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடைவில் நடைபெறும் எதிர்க்கட்சி பேரணியில் பங்கேற்க அநீதி இழைக்கப்பட்டதாக உணரும் அனைவரையும் கேட்டுக்கொள்வதாக நாமல் ராஜபக்சே கூறியுள்ளார்.
இது யாரையும் ராஜாவாக்கும் போராட்டம் அல்ல, மாறாக மக்கள் சார்பாக அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்யும் போராட்டப் பேரணி என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - ராகேஷ்
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri