நாமலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீக்கம்
கிறிஷ் நிறுவனம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டுள்ளது.
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பில் நாமல் ராஜபக்ச 70 மில்லியன் ரூபா ஊழல் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்றைய தினம் (21.06.2023) கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வெளிநாட்டு பயண தடை
அதன்போது சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடுக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயண தடையை நீக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை நீதிமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 7 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri
