அலரி மாளிகையில் தம்மோடு தேநீர் அருந்தும் அரசியல்வாதிகளின் கட்சித்தாவல்! அம்பலப்படுத்தும் நாமல்
எமது தவறுகளைத் தட்டிக் கேட்கும் உரிமை எமக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரமே இருக்கிறதே தவிர, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் சாணக்கியன் போன்வர்களுக்கு எந்தவோர் அருகதையும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிள்ளையான் அன்று தொடக்கம் இன்று வரை தான் கொண்ட கொள்கையில் மாற்றமின்றி கட்சித் தாவலின்றி தம்மோடு தொடர்ந்து பயணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலைமை அப்படியிருக்கையில் அலரி மாளிகைக்கு அடிக்கடி வந்து எம்மோடு தேநீர் அருந்துவதும், நிலையான அரசியல் கொள்கையின்றி கட்சித்தாவி சுயநலத்துக்காக தமிழ் மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவதையும் பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
