பிரதமர் ஹரிணியின் தீர்மானத்தால் மகிழ்ச்சியில் நாமல்!
இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஹரிணி, நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு நாமல் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
நன்றி தெரிவிப்பு
கடந்த சில நாட்களாக பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்ததாகவும், அரசாங்கம் தலையிட்டு அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச இதன்போது கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் நாமல் ராஜபக்ச சிறப்பு கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளின் பேரில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 21 மணி நேரம் முன்
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri