நாமல் மற்றும் தாயார் கைதா..! அச்சத்தில் ராஜபக்ச குடும்பம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை நாளையதினம்(03.02.2026) பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம் அளிப்பதற்காக ஷிரந்தி ராஜபக்சவுக்கு முன்னதாக 27ஆம் திகதி பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அன்றைய தினம் தான் முன்னிலையாக முடியாது என்றும், அதற்காக 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் அவர் தனது வழக்கறிஞர் மூலம் பொலிஸாருக்குத் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாததால், பிப்ரவரி 3 ஆம் திகதி மீண்டும் பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவையும் நாளையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri