சரித்திரப் புகழ் மிக்க நல்லூர் ஆலயத்தின் சித்திரத்தேர் வெள்ளோட்டம் (Video)
நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் வருடாந்த தேர்த்தோற்சப நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
சரித்திரப் புகழ் மிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் பெருமளவான பக்தர்கள் புடைசூழ இன்று காலை இடம்பெற்றுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பரிபாலகர்களான மாப்பாண முதலியார் பரம்பரையின் மூன்றாம் இரகுநாத மாப்பாண முதலியார் காலத்தில் ஆலயத்துக்கான முதலாவது தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் காலத்தில் சண்முகப்பெருமான் ஸ்தாபிக்கப்பட்டதுடன், தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளி சிங்காசனம் ஆகியவற்றைச் செய்து கொடுத்துள்ளார்.
சித்திரத்தேர் வெள்ளோட்டம்
நல்லூரில் பாவனையில் இருந்த தேர் பழுதடைந்த நிலையில் இருந்த காரணத்தினால், அதன் அபாயத்தை உணர்ந்த ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார், புதிய தேர் ஒன்றை 1964 ஆம் ஆண்டு திருப்பணி நிறைவேற்றி, தானும் வடம் பிடித்து இழுத்து இரதோற்சவத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.
புனருத்தாரணத் திருப்பணி
அந்த தேரே மீண்டும் புனருத்தாரணத் திருப்பணி நிறைவுற்று இன்று வெள்ளோட்டம் கண்டுள்ளது. ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியாரான குமாரதாஸ் மாப்பாண முதலியார் நல்லூர் கோயிலின் 10 ஆவது கோயில் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.
இவர் தொடர்ச்சியாக 55 வருடங்களுக்கு மேலாக இவர் முருகனுக்குத் தொண்டாற்றி வருகின்றார்.
இவர் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்று 1965 ஆம் ஆண்டு தொடக்கம் நல்லூர் வருடாந்த மகோற்சவத்திற்கு முன்னர் வருடா வருடம் கோயிலுக்கான திருப்பணியை நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
