பூக்களின் அலங்காரத்திற்கு மத்தியில் மயில் மீது ஆலய உள்வீதியுலா வந்த நல்லூர் கந்தன்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 13ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்த நிலையில் இன்றைய தினம் மஹோற்சவத்தின் ஏழாம் நாள் உற்சவம் காலை வேளையில் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிறப்பு தீபாராதனை மற்றும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.
இதனை தொடர்ந்து முருகப்பெருமான் பூக்களின் அலங்காரத்திற்கு மத்தியில் மயில் மீது ஆலய உள்வீதியுலா வந்திருந்தார்.
என்ற போதும் கோவிட் பெருந்தொற்று காரணமாக ஆலயத்திற்கு அடியவர்களை வர வேண்டாம் என ஆலய நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.