நல்லூர் பிரதேச செயலகம் பெற்றுக்கொண்ட இரண்டு உயரிய விருதுகள்
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகம் Presidential Environmental Awards - 2025 இன் சிறந்த அரச அலுவலகத்திற்காக Merit Award ஐ பெற்றுக்கொண்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் Presidential Environmental Awards - 2025க்கான விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தொடர்ச்சியாக கடந்த 11 ஆண்டுகளாக விருது வழங்கி வருகின்றது.

சிறந்த சமூக வலைத்தளத்திற்கான விருது
இந்நிலையில் இம்முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த சமூக வலைத்தளத்திற்கான Presidential Environmental Awards - 2025 இன் Social Media Category க்கு - அகில இலங்கை ரீதியாக நல்லூர் பிரதேச செயலகத்தின் Facebook ற்கு மட்டும் Special Jury Award கிடைக்கப்பெற்றது.

நல்லூர் பிரதேச செயலகம் மட்டுமே தேசிய ரீதியில் ஓரே தடவையில் முதற்தடவையாக இரு விருதுகளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமன்றி பிரதேச செயலாளரும், அவரது குழுவும் ஜனாதிபதியை சந்தித்துள்ளதுடன், இதன்போது ஜனாதிபதியால் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |