இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசா காலம் நீடிப்பு:அமைச்சர் நளிந்த அறிவிப்பு
இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா காலத்தை நீடிக்கவும் அவர்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச ஊடக பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ச தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான தாக்குதலையடுத்து மத்திய கிழக்கில் ஏற்பட்டிக்கும் பதற்றம் மற்றும் அந்த நாடுகளில் இருக்கும் இலங்கை மக்கள் தொடர்பில் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.அங்கு அவர் தெரிவித்த மேலதிக தகவல்கள்,
வெளிநாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு
இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு அவர்களின் விசா காலம் இரு கிழமைகளுக்கு அதாவது 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.அதற்கான எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது.
மேலும் சுற்றுலா பயணிகளின் விசாவும் கட்டணம் அறவிடப்படாமல் நீடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக வெளிநாட்டு அமைச்சு தூதுவராயலங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.

சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களின் நாட்டுக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.அவர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளை தவிர்த்து மாற்று வான்பறப்புகளை பயன்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபையின் 1912 என்ற துரித தொலைபேசி அழைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் போக்குவரத்து தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கை சூழ்ந்துள்ள போர் மேகம் இந்தியாவையும் ஆக்கிரமிக்கும் அபாயம் - நாடு முழுவதும் பறந்த உத்தரவு
தீவிரமடையும் நிலைமை: டுபாய் - அபுதாபியில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை - வெளியானது அறிவிப்பு