வன்முறையில் ஈடுபட போகும் அநுரவுக்கு வாக்களித்தவர்கள் - நளின் பண்டார எதிர்வு கூறல்
தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள் அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் கத்தி-கம்பு-பொல்லுகளால் சண்டையிட்டுக் கொள்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எதிர்வு கூறல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றி அவர் குறித்த எதிர்வு கூறலை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "இதற்கு முன்னர் மேற்கொண்ட கல்வி சீர்திருத்தங்களின் தொடர்ச்சி தான் இந்த சீர்திருத்தமாகும்.
கல்வி வெள்ளை அறிக்கை
கல்வி வெள்ளை அறிக்கையின் ஒரு நகல் பத்திரமே கொண்டு வரப்பட்டிருக்கிறது. சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
அன்று வெள்ளை அறிக்கையை எரித்தவர்கள் தான் இவர்கள். ஜனாதிபதியும் அன்று மாணவர் தலைவராக இதை எதிர்த்திருப்பார்.
நான் அப்போது தரம் இரண்டில் கல்வி கற்று கொண்டிருக்கும் போது அண்ணாமார்கள் கல்வி வெள்ளை அறிக்கையை எரிப்பதை கண்டிருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.



