நாலக எதிரிசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்
ஈ.டி.ஐ மற்றும் சுவர்ணமஹால் நிறுவனங்களின் பணிப்பாளர் சபையை சேர்ந்த முன்னாள் உறுப்பினர் நாலக எதிரிசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்.
இதேவேளை ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோர் நேற்று மாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன்படி இன்று நாலக எதிரிசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்துள்ளார். 13.7 மில்லியன் ரூபாய் வைப்பு பணத்தை சட்டவிரோதமாக ஏற்றுக்கொண்டமை, முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈ.டி.ஐ மற்றும் சுவர்ணமஹால் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியிருந்தமையை யடுத்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றிருக்கின்றனமை குறிப்பிடத்தக்கது.