பிள்ளையானுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் நாமல்.. விரைவில் உண்மைகள் அம்பலம்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கவலைப்படுவதற்கான காரணம் எதிர்காலத்தில் அம்பலமாகும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், "பிள்ளையான் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கவலைப்படுவதற்கு காரணம் இருக்கின்றது.
அந்த காரணம் எதிர்காலத்தில் அனைவருக்கும் தெளிவாகிவிடும். அதன்படி, இந்த விவகாரம் குறித்து புலனாய்வுக் குழு முறையான விசாரணைகளை நடத்தி வருகின்றது.
குற்றப்பத்திரிகை
அரசாங்கம் என்ற வகையில், விசாரணைகளுக்குத் தேவையான வசதிகளை மட்டுமே எமது தரப்பு வழங்கும். விசாரணைகளுக்குப் பிறகு, சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சமர்ப்பிப்பார்.
அதன் பிறகு, மூளையாகச் செயல்பட்டவர்கள் நீதிமன்றங்கள் மூலம் தண்டிக்கப்படுவார்கள். ஏப்ரல் 21 தாக்குதலில் தொடர்புடைய உண்மையான சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள்.
எனவே இத்தகைய சூழ்நிலையில், உதய கம்மன்பில, ரணில் விக்ரமசிங்க, நாமல் ராஜபக்ச மற்றும் சரத் வீரசேகர போன்றவர்கள் வருத்தமடைந்திருப்பது ஆச்சரியமல்ல” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
