வரலாற்றுச் சிறப்புமிக்க புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில் நடந்த காட்சிகள்
பல்லாயிரம் மக்களின் பக்தி கோஷங்களுடன் கிளிநொச்சி புளியம்பக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்திர பொங்கல் விழா வெகு விமர்சையாக இடம்பெற்றுள்ளது.
குறித்த பொங்கல் நிகழ்வானது நேற்று (24) நடைபெற்றுள்ளது.
பொங்கல் நிகழ்வுக்காக கடந்த 17ஆம் திகதி பண்டம் எடுத்து வர புத்தூர் பண்டமாவடி சென்று அங்கு மக்களிடம் சேகரிக்கப்பட்ட பொருட்களை மாட்டு வண்டில்களில் கொண்டு வரப்பட்டு விழா இடம்பெறுவது திருவிழாவின் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்துக்கு நீங்கள் பல தடவை சென்றிருந்தாலும் காணத்தவறிய அருமையான காட்சிகளை உள்ளடக்கி வருகிறது கீழ் உள்ள காணொளி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |