பிள்ளையானின் கடத்தலில் புதிய சர்ச்சை! தீவுச்சேனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரவீந்திரநாத்தின் மர்மம் (VIDEO)
பிள்ளையானால் கடத்தப்பட்ட இளைஞர்,யுவதிகள் தீவுச்சேனை பகுதிக்கு கொண்டுச்செல்லப்பட்டு அங்கு கொலை செய்யப்பட்டு மனித புதைக்குழிகளாக மறைக்கப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் பகிரங்கமாக ஆதாரங்களுடன் அறிவித்தும் இதுவரை குறித்த பகுதிகள் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, கடத்தப்பட்ட ரவீந்திரநாத் என்பவர் தீவுச்சேனை பகுதிக்கு கொண்டுச்செல்லப்பட்டு பின்னர் அந்த இடத்திலிருந்து இன்று வரை வெளியில் கொண்டுவரப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் தற்போது புலனாய்வு அதிகாரிகளின் நடமாட்டம் குறித்த பகுதிகளில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
