ஈரானில் பதவியேற்பு விழாவில் ஆளுநரை அறைந்த மர்ம நபர்! வைரலாகும் காணொளி
ஈரானில் பதவியேற்பு விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த ஆளுநரை மர்மநபர் ஒருவர் திடீரென அறைந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அபிதின் கோரம் (Abidin Koram) நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பதவியேற்பு விழாவில் அபிதின் கோரம் மேடையில் பேசிக் கொண்டிருக்கையில்,மர்மநபர் ஒருவர் மேடையில் ஏறி திடீரென கண்ணத்தில் அறைந்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டதில், அந்த நபரின் பெயர் அயுப் அலிசாதே (Ayub Alizadeh) என்பது தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்ற
போதும், தன் மனைவிக்கு ஆண் மருத்துவர் சிகிச்சை அளித்ததற்காக அவர் கோபத்தில்
இருந்தார் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறப்புச் செய்திகள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம்.. யார் தெரியுமா Cineulagam

இயக்குனரும், நடிகருமாக கே.பாக்யராஜ் பிறந்து, வளர்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அழகான வீடு Cineulagam
