கொழும்பில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட இளைஞனின் சடலம்
கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி வீதிக்கு அருகில் இளைஞன் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் கீழே விழுந்து கிடப்பதாக கிடைத்த தகவலுக்கமைய கல்கிஸ்ஸ பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். உயிரிழந்தவர் 22 வயதுடைய கல்கிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவராகும்.
சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனின் சடலம் தொடர்பில் இன்றைய தினம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கொலையாளியை கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.