இலங்கையில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை - பெருந்தொகை பணத்துடன் பேருந்தை திருடிய கும்பல்
காலியில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் சாரதியை கொடூரமாக தாக்கி பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பேருந்தை கும்பலொன்று கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி வீதியில் உள்ள முன்கேன பகுதியில் நேற்று முன்தினம் (17) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏழு பேர் கொண்ட கும்பல், ஒரே நேரத்தில் பேருந்திற்குள் புகுந்து, தூங்கிக்கொண்டிருந்த சாரதியை தாக்கி பேருந்துடன் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதன்போது தாக்குதலுக்கு உள்ளான சாரதி காயங்களுடன் பாணந்துறை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பண்டாரகம பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான இந்த பேருந்து, தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்த பேருந்தை கொள்ளையடித்த கும்பலில், சில மாதங்களுக்கு முன்பு பேருந்தை வாங்க நினைத்த ஒருவரும் உள்ளடங்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri