19 ஆவது நாளாக தொடரும் முத்து நகர் விவசாயிகளின் சத்தியாக் கிரகப் போராட்டம்
திருகோணமலை- முத்து நகர் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்காக தொடர்ந்தும் 19 ஆவது நாளாக சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
குறித்த போராட்டம் நேற்று (05) திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
தங்களது விவசாய காணிகளை தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்திக்காக தாரைவார்க்கப்பட்டதையடுத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
போராட்டம்
கொழும்பில் அண்மையில் பிரதமர் அலுவலகம் முன் இடம்பெற்ற போராட்டத்தில் பிரதமருடனான சந்திப்பில் பத்து நாட்களுக்குள் தீர்வு தருவதாக கூறி பத்து நாட்கள் கடந்துள்ள போதிலும் எவ் வித பதிலும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, இந்த மாதம் 20ஆம் திகதி வரை காலக்கெடு வழங்குமாறும் பிரதமர் அலுவலகம் தெரிவித்ததாக முத்து நகர் ஒன்றினைந்த விவசாய சம்மேளத்தினர் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 16 மணி நேரம் முன்

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri
