ஐ.பி.சி தமிழின் அனுசரணையில் முத்தமிழ் விழா (Photo)
யாழ். மாநகர சபை முதல் முறையாக ஏற்பாடு செய்த முத்தமிழ் விழா, ஐ.பி.சி தமிழின் அனுசரணையில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் வெகுவிமர்சையாக நேற்று (16) இடம்பெற்றது.
இயல்துறை, இசைத்துறை, நாடகத்துறை என மூன்று அமர்வுகளாக நடத்தப்பட்ட முத்தமிழ் விழா நிகழ்ச்சிகளில் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழ் கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் மேள தாள வாத்தியங்கள் முழங்க, பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் ஆகியவற்றுடன் விருந்தினர்கள் யாழ். மாநகர சபை முன்றலில் இருந்து நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதன்போது கவிஞர்.சோ.பத்மநாதனுக்கு யாழ். மாநகர சபையால் இயல்துறைக்கான அரச கேசரி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த அமர்வில் கம்பவாரிதி இ.ஜெயராஜ் குழுவினரின் வழக்காடு மன்றம் விசேட அம்சமாக அமைந்திருந்தது. இந்த நிகழ்வில் யாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன், ஐ.பி.சி தமிழின் குழுமத் தலைவர் கந்தையா பாஸ்கரன், வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.





தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri