இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான புதிய நேர வரம்புகள் அறிவிப்பு
இலங்கையில் இசை நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதற்கான நேர வரம்பு திருத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில்,இலங்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இசை நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதற்கான நேர வரம்பு திருத்தப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமைகள் வழக்கு தொடர்பான நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கால அவகாசம் மாற்றப்பட்டுள்ளது.
இசை நிகழ்ச்சிகளுக்கான நேர வரம்பு
இதற்கமைய இரவு 10 மணிக்கு இசை நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதற்கான நேர வரம்பு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இசை நிகழ்ச்சிகளை நள்ளிரவு 1.00 மணிக்கு நிறைவு செய்ய வேண்டும்.
As per the Supreme Court FR case order
— Harin Fernando (@fernandoharin) June 20, 2023
The original time limit to end the musical shows at 10pm is hereby changed as follows.
* Fridays and Saturdays 1.00AM
* Sundays 12.30AM
* Resonable distance should be kept between the venue/ musical shows from hospitals n religious places
இதேவேளை ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 மணிக்கு இசை நிகழ்ச்சிகளை நிறைவு செய்ய வேண்டும்.
எவ்வாறாயினும், இசை நிகழ்ச்சிகள் இடம்பெறும் இடம், மருத்துவமனைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு இடையில் நியாயமான இடைவெளியை பேண வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |