தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் கூட்டணியாக செயற்பட தீர்மானம்
ஒரு தேர்தல் கூட்டாக இல்லாமல் தொடர்ந்து பயணிக்கக் கூடிய ஒரு அரசியல் கூட்டாக தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்தும் கூட்டணியாக செயற்பட தீர்மானித்து இருக்கின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை இன்று (10-03-2025) கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் செலுத்தியுள்ளார்.
இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் கட்சிகள்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“அதாவது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிலே ஏழு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன தமிழ் மக்கள் பரவலாக ஒற்றுமை பற்றியும் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அவர்களது அபிலாசைகளின் அடிப்படையில் இது ஒரு தேர்தல் கூட்டாக அல்லாமல் தொடர்ந்தும் பயணிக்கக் கூடிய ஒரு அரசியல் கூட்டாக தமிழ் மக்களின் அடிப்படை நாளாந்தப் பிரச்சனை உட்பட தமிழ் மக்களினுடைய அடிப்படை அபிலாசைகளை தொடர்ந்தும் கூட்டணியாக முன்னெடுத்துச் செல்ல தீர்மானித்து இருக்கின்றோம்.
அந்த வகையிலே அந்த வகையிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் இன்று இந்த மூன்று சபைகளுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தி இருக்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

டாக்டராக இருந்து ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., 7 ஆண்டுகளுக்கு பிறகு ராஜினாமா செய்து தற்போது செய்யும் வேலை? News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த பிறகு ஒரு சிறுவன் வந்து என்னிடம்... நடிகை சுஜாதா ஓபன் டாக் Cineulagam

46 வயதில் கர்ப்பம்: வயிற்றில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட சங்கீதா- குவியும் வாழ்த்துக்கள் Manithan
