கொலைகளை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாட்டில் இடம்பெற்று வரும் படுகொலைகளை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களமும் புலனாய்வுப் பிரிவும் செயற்திறனாக செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சம்பவமொன்று இடம்பெற்றதன் பின்னர் இது இவ்வாறுதான் இடம்பெற்றுள்ளது என்பதை கண்டு பிடிப்பதற்கு பொலிஸாரின் உதவி தேவையில்லை எனவும், சம்பவம் நடைபெற முன்னதாக அதனை தடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிர் ஆபத்து உள்ளவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் சில முயற்சிகளை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யார் கொலை செய்யப்பட்டாலும் அது தவறு எனவும் கொலைகளை அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கொலைகளை தடுப்பதற்கு பொதுப்பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட தரப்பினர் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே பொலிஸார் தேவையில்லாத வேலைகளுக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமது வீட்டிற்கு நான்கு தடவைகள் கள்வர்கள் புகுந்த போதிலும் இதுவரையில் கள்வர்கள் பிடிக்கப்படவில்லை என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.