75 வருடங்களின் பின்னர் தமது சீக்கிய சகோதரர்களை சந்தித்த மும்தாஜ் பீபி
1947ஆம் ஆண்டு தனது குடும்பத்தை விட்டு பிரிந்த பாக்கிஸ்தானிய பெண் ஒருவர், 75 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் தனது இந்திய சகோதரர்களை முதன்முறையாக சந்தித்துள்ளார்.
இந்திய - பாக்கிஸ்தான் போரின் போது தனது சீக்கிய குடும்பத்திலிருந்து பிரிந்த மும்தாஜ் பீபி, ஏப்ரல் மாதம் பாக்கிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவில் தனது சகோதரர்கள் குர்முக் சிங் மற்றும் பல்தேவ் சிங் ஆகியோரை முதல் முறையாக சந்தித்துள்ளார்.
1947 இல், இந்திய - பாக்கிஸ்தான் பிரிவினையானது, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என்ற இரண்டு சுதந்திர நாடுகளை உருவாக்க வழிவகுத்தது.
மனைவி மகள் குறித்து தந்தையாருக்கு கிடைக்கப்பெற்ற செய்தி
இரண்டு நாடுகளுக்கு இடையிலான வன்முறையின் போது, இந்த குடும்பத்தின் தந்தையான பாலா சிங், தமது மனைவி கொல்லப்பட்ட நிலையில், பாக்கிஸ்தானில் இருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார்.
இதன்போது தமது மனைவியுடன் தமது மகளும் இறந்துவிட்டதாக குடும்பத்தின் தந்தைக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில் அவர், இந்தியாவில் மற்றுமொரு உறவுக்கார பெண்ணை மணந்தார்.
எனினும் அவர் கேள்விப்பட்டபடி, பாக்கிஸ்தானில் அவருடைய மகள் வன்முறையில் கொல்லப்படவில்லை.
அவரை (மும்தாஜ் பீபி), பாக்கிஸ்தானில், முஸ்லிம் தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்தனர் என்பது பின்னரே தெரியவந்தது.
இந்நிலையில் பால்சிங்கின் இந்தியாவில் பிறந்த இரண்டு மகன்மார், தமது ஒன்றுவிட்ட சகோதரியைப் பற்றி சமூக ஊடகங்களின் உதவியுடன் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து பாக்கிஸ்தானிய யூடியூபர் ஒருவரின் உதவியுடன் பிரிந்திருந்த சகோதரர்கள் சந்தித்துள்ளனர்.
பாக்கிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவுக்கான யாத்திரையின்போதே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
மும்தாஜ் முஸ்லிமாக வளர்க்கப்பட்டவர். எனினும் அனைத்து மனிதர்களையும் சமமாக ஏற்றுக்கொள் என்ற சீக்கிய குருவான நானக்கின் கருத்துப்படி, அவரை ஏற்றுக்கொண்டதாக சீக்கிய சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசிடம் கோரி்க்கை
இந்நிலையில் அவர்கள், இந்திய அரசிடம் கோரி்க்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
இரண்டு நாடுகளுக்கு இடையிலான விசா செயல்முறைகளையும் எளிதாக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.