பெப்ரவரி 4ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் அணிதிரளுங்கள்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
இலங்கையின் சுதந்திர நாளை தமிழர் தேசத்தின் கரிநாளாக அடையாளப்படுத்தும் போராட்டம் ஒன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு சிவில் சமூகங்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரும் ஒன்றிணைந்து இந்த அழைப்பினை விடுத்துள்ளார்கள்.
இன்று முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் தவத்திரு வேலன் சுவாமி மற்றும் சமூகவிஞ்ஞான ஆய்வுமன்றம்,வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் இணைப்பாளர்கள் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.
இதன்போது கருத்து தெரிவித்தவர்கள்,
பெப்ரவரி 4 ஆம் நாள் ஸ்ரீலங்hகவின் சுதந்திர தினத்தினை முழுமையாக பகீஸ்கரித்து அது தமிழர்தேசத்தின் கரிநாள் என்ற அடிப்படையில் தமிழர்களாக சுயர்நிர்ணயத்திற்காக போராடிவருகின்ற மக்களாக எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றோம்.
இந்த ஆண்டு பெப்ரவரி நான்காம் திகதி காலை 10.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அனைத்து தமிழ் உறவுகளும் ஒன்றுகூடி தமிழர் தேசத்தின் கரிநாள் என்ற தொனிப்பொருளில் எங்கள் உணர்வுகளையும் உரிமைக்கான குரலினையும் எடுத்துக்காட்டவேண்டும்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் தலைமையேற்று போராட்டத்தை நடத்த இருக்கின்றார்கள்.
எங்கள் தாய்மார்கள் கடந்த 12 ஆண்டுகளாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று நீதி கோரி போராடிவருகின்றார்கள்.
சிவில்அமைப்புக்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆதரவுகொடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டதரப்புக்கள், பொதுமக்கள், மதகுருமார்கள், சிவில் சமூகங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்ககள், மாணவர்கள், மாதர் சங்கங்கள் சமூக மட்டத்தில் இருக்கும் அத்தனை பொது கட்டமைப்பும் இதற்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்று அன்பாக வேண்டிநிக்கின்றோம்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரைக்குமான மக்கள் பேரெழிச்சி இயக்கமும் தன்னுடைய ஆதரவினை வெளிப்படுத்தி நிக்கின்றது.
ஈழத்தமிழர்கள் அனைவரும் எழுச்சி உற்று இன்று எங்கள் எதிர்பினை பதிவுசெய்யவேண்டிய தேவை உள்ளவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.
எந்த இடத்தில் எங்ககள் இன அழிப்பு நடைபெற்றதோ, எந்த இடத்pல் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழந்தார்களோ எந்த இடத்தில் எங்கள் போராட்டம் மௌனிக்கப்பட்டதோ அந்த இடத்தில் இருந்து நாங்கள் மீண்டும் எழுவோம் என்பதை இந்த போராட்டத்தில் நாங்கள் வெளிப்படுத்த விரும்புகின்றோம்.
முள்ளிவாய்க்கால் மண் எங்கள் இனத்தின் பரிகார நீதிக்கான ஆரம்ப இடமாக அமைந்துள்ளது.எங்கள் உறவுகளை நாங்கள் கையளித்தோம்.
அதற்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை நீதி கேட்டு எங்கள் தாய்மார்கள் நீண்டகாலமாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதனை கருத்தில் கொண்டு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தொடங்கி வட்டுவாகல் பாலம் ஊடாக முல்லைத்தீவு நகர்வரை பேரணியாக சென்றடையவுள்ளோம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு அனைத்து தரப்பினரும் முழுமையான ஆதரவினை தரவேண்டும்.
எங்கள் தமிழ்தேசியம் தாயகம் சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளை வைத்து
இனஅழிப்பிற்கு பரிகார நீதியாக எங்கள் இனத்தினை நோக்கி ஒருதிசையில்
பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற நோக்கில் இந்த எழுச்சியினை
வெளிக்கொண்டுவருகின்றோம். இதற்காக அனைவரும் ஒத்துளைப்பு வழங்கவேண்டும் என்றும்
அவர் தெரிவித்துள்ளார்.





குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
