பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது புலம்பெயர் தேசமான பிரித்தானியாவில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
நந்திக்கடலை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்காக்கல் இறுதி போரின் போது கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் முகமாகவும் பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்று வளாகத்தில் உள்ள ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் நினைவேந்தலானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமயப் பெரியார்கள், பொது மக்கள் என பலரின் ஒன்றுகூடலோடு முள்ளிவாய்க்கால் மண்ணில் தமது உறவுகளை இழந்தவர்களின் ஒன்றிணைவோடு ஆரம்பமாகின நிகழ்வில் பிரித்தானிய கொடியினை சரோ பிரதேச கவுன்சிலர் சசி மயிலவாகனம் ஏற்றி வைக்க தமிழீழ தேசிய கீதம் ஒலிக்க தமிழீழ தேசிய கொடியினை முகுந்தன் ஏற்றி வைத்துள்ளார்.
அடுத்ததாக இறுதி கட்ட போரில் உயிர் நீத்த உறவுகளை நெஞ்சில் நிறுத்தி அகவணக்கம் இடம் பெற்றது.
நினைவேந்தல் தூபி
அதனைத்தொடர்ந்து பிரதான நினைவுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் செயற்பட்டு முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட கேணல் கண்ணன் மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஞானச் செல்வம் உதய ராசாவின் புதல்வன் பவசுதன் உதயராசா ஏற்றி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக அங்கே குழுமி இருந்த உறவுகள் தமக்கு முன்னால் நடப்பட்டிருந்த பந்தங்களை ஏற்றி இனவழிப்பு போரில் இறந்த தம் உறவுகளை நினைவுகூர்ந்தனர்.
தொடர்ந்து நினைவேந்தல் தூபிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இளையோரான சௌமிகா புஷ்பராஜா ஆங்கிலத்தில் தன் உணர்வுகளை வெளி கொணர்ந்தார்.

அதனைத்தொடர்ந்து தமிழர் இனப்படுகொலையின் தனது உணர்வுகளை கவிதையாக கிசானி விக்னேஸ்வர ராஜா அங்கே இருந்த உறவுகளுடன் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து தொழிற் கட்சிக்கான தமிழ் அமைப்பின் தலைவர் ஆங்கில மொழியில் முள்ளிவாய்க்கால் அவலத்தினையும் அதன் நீதி கோரலையும் சென் கந்தையா வழங்கி வைக்க பாலகிருஷ்ணன் அவர்கள் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு பேருரையினை வழங்கினார்.
நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் வாழ்க்கையை நினைவு படுத்தும் வகையில் வந்திருந்தவர்களுக்கு " முள்ளிவாய்க்கால் கஞ்சி " சிரட்டையில் பரிமாறப்பட்டதுடன் முள்ளிவாய்கால் வலி சுமந்த மனிதம் வென்ற கணங்கள் எனும் நினைவு பாடல் ஒன்றும் வெளியீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் பெருமக்கள், இளையோர், முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து தப்பியவர்கள், உள்ளூர் பிரித்தானியா மக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு, உணர்வுகளுடன் சங்கமித்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan
சேரனை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா என மோசமாக திட்டிய நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam