போரில் இரு கண்ணை இழந்த முன்னாள் கடல் கரும்புலியின் இன்றைய நிலை!(Photos)
நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு நேற்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
நவீன கால ஆசிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய உள்நாட்டு யுத்தம் இதுதான். பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் சொல்லொணா இழப்புகளைக் கொண்டு வந்த இலங்கை உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி முடிவுக்கு வந்தது.
போர் மௌனிக்கப்பட்டாலும் அதன் ரணங்களை தமது வாழ்நாளில் எப்போது நினைவுக்கூறும் முன்னாள் போராளிகளில் ஒருவர் தான் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சேயோன்.
2006ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து. தமது பயிற்சிகளை நிறைவு செய்த சேயோன். கடல் கரும்புலி படையில் இணைந்து இலங்கை இராணுவத்துடன் நடுக்கடலில் நடந்த சுமார் 86 சண்டையில் முன்னின்று சண்டையிட்டதாக தெரிவித்துள்ளார்.
அப்படியொரு சண்டையில் தான் சேயோன் தமது வலது கண்பார்வையை இழந்து காலப்போக்கில் தமது இடது கண்பார்வையினையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இராணுவ கட்டுப்பாட்டில் சரணடைந்த சேயோன் புனர்வாழ்வளிக்கப்பட்டு பெற்றோருடன் மீண்டும் இணைந்து வாழ இலங்கை இராணுவம் தமதுக்கு உதவி செய்ததாகவும் தெரிவிக்கின்றார்.
இலங்கை இராணுவத்துடனான யுத்தம் காரணமாக தமது இரு கண் பார்வையினையும் இழந்து இருள் சூழ்ந்த ஒரு வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ள சேயோன் போன்ற பல முன்னாள் போராளிகள் எம்மத்தியில் இன்றும் வாழ்ந்துகொண்டு தான் இருகின்றார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 19 மணி நேரம் முன்

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

தங்கமயில் கர்ப்பம்.. சோகத்தில் இருந்த குடும்பத்தின் ரியாக்ஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri
