வடக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு(Photos)
யாழ்ப்பாணம்- நல்லூரில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபி முன்பாக இன்று(11.05.2023) குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன் தலைமை தாங்கியுள்ளார்.
இந்நிகழ்வில் கொல்லப்பட்ட மக்களுக்கு தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் முன்பாக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்காலில் அகப்பட்ட மக்களின் பசியைப் போக்க கஞ்சி வழங்கப்பட்டமையை நினைவுகூறும் முகமாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-திலீபன்






அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி Manithan

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான் News Lankasri
