முல்லைத்தீவில் சுதந்திரபுரம் படுகொலையின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் இலங்கை இராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்டோருக்கு நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
(10.06.1998) ஆம் திகதி இலங்கை ராணுவத்தின் விமான தாக்குதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட செல் தாக்குதல்களில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட 33 அப்பாவி பொது மக்களுடைய 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று (06.10.2023) உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
தூயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் முல்லை ஈசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொது சுடரினை இரண்டு மாவீரர்களின் தந்தையான முடியாண்டி அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து உயிரிழந்தவர்கள் நினைவாக பொது படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் உயிரிழந்த பொதுமக்களின் உறவினர்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை முன்னால் உறுப்பினர்கள் கரைச்சி பிரதேச சபை முன்னால் உறுப்பினர்,முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.நோகராதலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு நினைவுரைகளை ஆற்றியுள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 19 மணி நேரம் முன்

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri

இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு News Lankasri

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
