முல்லைத்தீவு தையல் பயிற்சி வகுப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Mullaitivu Sri Lanka Northern Province of Sri Lanka
By Uky(ஊகி) Jul 10, 2024 07:06 AM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report
Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவில் (Mullaitivu) உள்ள உப்புமாவெளி கிராமத்தில் நடைபெற்று வரும் தையல் பயிற்சி வகுப்பில் மாணவர்கள் காட்டிவரும் அக்கறை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இலவச பயிற்சி வகுப்பாக நடைபெற்று வரும் இந்த தையல் பயிற்சி வகுப்பில் பங்கெடுக்கும் மாணவர்கள் போதியளவில் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.

ஆரம்ப நாட்களில் அதிகளவிலான மாணவர்கள் இணைந்து பயிற்சியினை பெற்று வரும் போதும் பயிற்சியின் இறுதி நாட்களில் அந்த எண்ணிக்கை குறைந்து சென்றுவிடுவதனை அவதானிக்க முடிகின்றது.

தொடருந்து நிலைய அதிபர்களுக்கு கடுமையான எச்சரிக்கை! பதவி பறிபோகும் அபாயம்

தொடருந்து நிலைய அதிபர்களுக்கு கடுமையான எச்சரிக்கை! பதவி பறிபோகும் அபாயம்

பயிற்சி பெற்றவர்கள் தொழில் முயற்சியில் ஈடுபடும் அளவிலும் பாராட்டத்தக்க வெளிப்பாடுகளை அவதானிக்க முடியவில்லை என்பதும் குறித்துரைக்கப்படுவதாக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதிக முன்னுரிமை 

தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் முயற்சியினால் இலவச பயிற்சி வகுப்பாக இந்த தையல் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது.

மாணவர்களின் பயிற்சித் தேவைக்கான துணிவகைகளையும் ஏனைய பொருட்களையும் பெற்றுக்கொடுக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் பயிற்சி ஆசிரியரையும் தானே ஏற்பாடு செய்துள்ளது.

முல்லைத்தீவு தையல் பயிற்சி வகுப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Mullaitivu Sewing Training Course

சுய பொருளாதார முன்னேற்றத்துக்கான சுயதொழில் மேம்படுத்தலை அடிப்படையாக கொண்ட பயிற்சி வகுப்புக்களாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆர்வத்தோடு வந்து கலந்து கொள்ளும் மாணவர்கள் நாளடைவில் பல காரணங்களை முன் வைத்து இடைவிலகி விடுகின்றனர். ஒவ்வொரு மாணவரும் முன் வைக்கும் காரணங்கள் அவர்களின் தனிப்பட்ட காரணங்களாகவே இருக்கின்றன என தையல் பயிற்சி வகுப்பு தொடர்பில் கருத்துரைத்த அவ்வூர் சமூக ஆர்வலர் குறிப்பிடுகின்றார்.

உப்புமாவெளி கிராம மக்களின் தனியாள் வேலையாற்றும் திறனை மேம்படுத்துவதில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அதிகளவில் முன்னுரிமை வழங்கி செயற்படுவது பாராட்டத்தக்கது.பயனாளர்கள் இது தொடர்பில் அதிக கவனகெடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் நடக்கும் பகல் கொள்ளை ! சிக்கியது மற்றொரு பெரும் ஆதாரம்

சாவகச்சேரி வைத்தியசாலையில் நடக்கும் பகல் கொள்ளை ! சிக்கியது மற்றொரு பெரும் ஆதாரம்

தேறிய விளைவு

கடந்த காலங்களில் நடந்து முடிந்த தையல் பயிற்சி வகுப்புக்களில் பலர் கலந்து கொண்டு பயிற்சியை முடித்துக் கொண்டுள்ளனர்.

இவர்களிடையே ஒரு சிலரே தையல் முயற்சியை தங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

உள்ளூரில் உள்ள தையலுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் பழைய தையலாளர்கள் அதிகளவில் இருப்பதால் தாம் தையலை ஒரு தொழிலாக கொள்ள முடியவில்லை என காரணம் சொல்லும் பயிற்சி முடித்த மாணவர்களையும் சந்திக்க முடிந்திருந்தது.

போட்டி மிக்க ஒரு முயற்சியாக முல்லைத்தீவில் தையல் தொழில் இருப்பதும் இதற்கு ஒரு காரணம் என தையல் பயிற்சி ஆசிரியை ஒருவரும் இது தொடர்பில் தன் கருத்துக்களை பகிர்ந்து விளக்கியிருந்தார்.

வேறு பயிற்சிகளும் வேண்டும் 

பயிற்சி வகுப்புக்களை ஒழுங்கமைக்கும் போது தையல் பயிற்சிகளுக்கு மட்டும் முன்னுரிமை வழங்காது நிதி முகாமை மற்றும் சந்தைப்படுத்தல் உபாயங்களையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் படி பயிற்சி வகுப்புக்களை ஒழுங்கமைக்க வேண்டும் என்பதும் இங்கே நோக்கத்தக்கது.

இந்த முயற்சி முழு வெற்றியடைவதற்கு தையல் பயிற்சிகள் மட்டும் போதாது.அத்தோடு இணைந்த தொழில் நிறுவன கட்டமைப்புக்களின் மாதிரிகளை குறைந்தளவிற்கேனும் மாணவர்களிடையே அறிமுகம் செய்து வைக்க வேண்டும்.

முல்லைத்தீவு தையல் பயிற்சி வகுப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Mullaitivu Sewing Training Course

பயிற்சி முடிவின் பின்னர் கட்டமைக்கப்பட்ட சிறியளவிலான நிறுவன அமைப்பை உருவாக்கி அதனூடாக தங்கள் முயற்சிகளை விரிவாக்குவதற்கான ஆரம்ப அறிவாக இவை இருக்க வேண்டும்.

ஏற்றுமதிக்கான தையல் முயற்சி மற்றும் சந்தைப்படுத்தலுக்கான புதிய அணுகு முறைகள் என இவர்களின் சிந்தனை விரிவாக்கப்படும் போது தேறிய வருமானம் அதிகரிக்கும்.

வருமானம் ஈட்டக்கூடிய ஒரு தொழில் முறையின் பயிற்சி வகுப்பாக இந்த தையல் பயிற்சி வகுப்பு இருந்து விடுமானால் அதில் முழு கவனத்தோடும் ஆர்வத்தோடும் மாணவர்கள் கலந்து கொண்டு பயிறிசியை முடித்துக் கொள்வார்கள்.

பயிற்சி முடித்தவர்களின் வருமானம் ஈட்டும் முயற்சிகளும் வினைத்திறன் மிக்கவையாக இருக்கும் என சமூக விடய ஆய்வாளர் குறிப்பிடுவதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டால் நாட்டுக்கு காத்திருக்கும் ஆபத்து

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டால் நாட்டுக்கு காத்திருக்கும் ஆபத்து

பொருத்தமான முயற்சிகள் 

உப்புமாவெளியில் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் முயற்சியினால் மூன்றாவது தையல் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதலாவது குழுவுக்கான பயிற்சி வகுப்புக்களை முடிந்துள்ளது.இரண்டாவது பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்டவர்களின் இறுதி நாள் நிகழ்வுகளை படத்தில் காணலாம்.

முல்லைத்தீவு தையல் பயிற்சி வகுப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Mullaitivu Sewing Training Course

நிறுவனம் சார்ந்தோர் மற்றும் உடுப்புக்குளம் குழந்தை யேசு ஆலய பங்குத்தந்தை, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிகழ்வாக அந்நிகழ்வு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இருபதுக்கும் அதிகமான மாணவர்கள் ஆரம்ப நாட்களில் கலந்து கொண்ட போதும் இறுதியில் ஆறு மாணவர்களே இரண்டாவது குழுவில் பயிற்சியை முடித்துக் கொண்டனர் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

ஆயினும் மூன்றாவது பயிற்சிக் குழுவில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்துள்ளதாக தையல் பயிற்சி ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார்.

தையல் பயிற்சி செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கவையாக மேம்படுத்தப்படும் போது தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் முயற்சி சமூகத்தின் பொருளாதர வளர்ச்சியில் கணிசமான ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துவதில் பாரியளவில் உதவி நிற்கும் என்பதில் ஐயமில்லை.

அவுஸ்திரேலியாவில் வாழை இலை விருந்து வைத்து நடுவர்களை வியப்பில் ஆழ்த்திய இலங்கை யுவதி

அவுஸ்திரேலியாவில் வாழை இலை விருந்து வைத்து நடுவர்களை வியப்பில் ஆழ்த்திய இலங்கை யுவதி

வவுனியாவில் திறந்து வைக்கப்பட்ட இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம்

வவுனியாவில் திறந்து வைக்கப்பட்ட இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, சுண்டிக்குளி, Markham, Canada

20 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, மலேசியா, Malaysia, ஜேர்மனி, Germany

22 Apr, 2021
நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

02 Apr, 2005
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, தெல்லிப்பழை, Rochester, United States

21 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கந்தர்மடம், கொழும்பு

20 Apr, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Grevenbroich, Germany

19 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பிரான்ஸ், France

15 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, காங்கேசன்துறை, கொழும்பு, Markham, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US