முல்லைத்தீவில் கட்டுத்துவக்கு வெடித்து குடும்பஸ்தர் பலி (Photos)
முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பிரதேசத்திற்கு உட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் காட்டிற்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கட்டுத்துவக்கு வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை (09) இடம்பெற்றுள்ளது.
நெட்டாங்கண்டல் உழவனேரி பகுதியினை சேர்ந்த 38 அகவையுடைய தர்மலிங்கம் இளங்கோ என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கட்டுத்துவக்கு வெடித்ததில் படுகாயமடைந்த இவர் மீட்கப்பட்டு மல்லாவி ஆதாரமருத்துவமனை கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
உடலம் மல்லாவி ஆதாரமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை மற்றும் பொலிஸ் அறிக்கையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் குறித்து நெட்டாங்கண்டல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கிளிநொச்சி
கிளிநொச்சி பெரியகுளம் பகுதியில் உள்ளுர் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கமைய நேற்றைய தினம் (8) பிரதேசத்தில் உள்ள இராணுவத்தினரால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.








ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
