சிங்கள பேரினவாதத்தால் மனித புதைகுழியான தமிழர் தாயகம்: தீபச்செல்வன்(Video)
இலங்கை அரசாங்கத்தின் நீதி கட்டமைப்பானது உண்மையிலேயே நீதியுடன் செயல்பட்டு இருந்தால் தமிழர்கள் ஆயுதமேந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது என எழுத்தாளர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், நீதி வழங்கும் நடவடிக்கை அசமந்தப்படுத்தப்பட்டால் வடக்கு - கிழக்கு மண் மீண்டும் கிளர்ந்தெழும், எங்களுடைய தேசம் ஒருபோதும் நீதியைக் காணாது உறங்காது எனவும் இதன்போது சுட்டிக்காட்டி உள்ளார்.
பன்னாட்டு விசாரணை
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சுமார் 2000 நாட்கள் கடந்த நிலையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தங்களை உருக்கி - தங்களை இழந்து செய்கின்ற அந்தப் போராட்டமானது இந்த மண்ணில் நீடிக்கத் தான் போகிறது.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி போன்று எதிர்காலத்தில் இன்னும் பல மனிதப் புதைகுழிகள் தேசத்தில் கண்டுபிடிக்கப்படலாம்.
அவை எல்லாவற்றிற்கும் பன்னாட்டு விசாரணையே தீர்வாக இருக்கும். அதற்கான அநீதியும் சர்வதேச ரீதியாக இருக்கும். இதனை இலங்கையில் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது எனவும் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய விடயங்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
