மீன் விலை உயர்வு தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை பிரேரணை நிறைவேற்றம்
புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டமானது, நேற்று முன்தினம்(16.07.2026) இடம்பெற்றுள்ளது.
மீன் விலை உயர்வை கட்டுப்படுத்தல்
இதன்போது, பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதுடன், மக்களின் நலனை கருத்தில் கொண்டு மீன் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முக்கிய பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

கடல் வளம் நிறைந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் கூட சாதாரண மக்கள் வாங்கக்கூடிய மீன்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், கடற்றொழிலாளர்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யும் மீன்கள் இடைத்தரகர்கள் மூலம் பல மடங்கு விலை உயர்த்தப்பட்டு நுகர்வோரிடம் சென்றடைகிறது. இது கண்டிக்கத்தக்க விடயமாகவே காணப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால், பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மீன் விற்பனையில் ஈடுபடும் நடமாடும் வியாபாரிகள் மற்றும் மாலை நேரங்களில் வீதியோரங்களில் மீன் விற்பனை செய்பவர்கள் கட்டாயமாக பிரதேச சபையிடமிருந்து அனுமதிப்பத்திரத்தைப் பெற வேண்டும் என்ற பிரேரணை அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதிப்பை கட்டுப்படுத்தல்
மேலும் மீன் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு கடற்தொழில் அமைச்சர், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை மற்றும் கடற்தொழில் சமாசங்களுக்கு கடிதம் அனுப்புவதற்கும் சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

மேலும் சாதாரண மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களும் நியாயமான விலையில் கடலுணவுகளை பெற்றுக்கொள்ளும் சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும், இடைத்தரகர்களின் காரணமாக மீன்களின் விலை சடுதியாக உயர்வதால் நுகர்வோர் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முல்லைத்தீவு மட்டுமன்றி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இதே பிரச்சினை காணப்படுவதால், நாடளாவிய ரீதியில் நிலையான விலை கட்டுப்பாட்டு பொறிமுறையை அரசாங்கம் விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கு.அகிலன் வலியுறுத்தியுள்ளார்.
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan