மாவீரர் நினைவு கூரல் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி உத்தரவு
"இறந்தவர்களை நினைவுகூர்வது மானிடப் பண்பு” தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராயினும், அவ் அமைப்பின் கொடிகள், அடையாளங்களைப் பிரதிநிதித்துவம் செய்யாது இறந்தவர்களை நினைவு கூர முடியும் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் தடைசெய்யப்பட்ட இயக்கத்தினுடைய நிகழ்வு ஒன்றாக நினைவுபடுத்தக்கூடியதாக நினைவுகூரல்களை மேற்கொள்ளாது இறந்தவர்களுக்கு பொதுவான நினைவு கூரல்களை மேற்கொள்ள முடியும் என மாவீரர் நாள் தடைக்கட்டளையை இன்றையநாள்(25) முல்லைத்தீவு நீதிமன்றம் திருத்திய கட்டளையை ஆக்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 17 மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தின் 07 பொலிஸ் பிரிவுகளில் மாவீரர் நாளை நினைவு கூர வழங்கப்பட்டிருந்த மாவீரர் நாள் தடையுத்தரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், பிரதேச சபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், குகனேசன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் முல்லை ஈசன் ஆகியோர் சார்பாக சட்டத்தரணி கேசவன் சயந்தன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம் மூலம் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த திருத்திய கட்டளையை ஆக்கி உத்தரவிட்டுள்ளார் . முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையம்,புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம், மல்லாவி ,ஒட்டுசுட்டான் ,மாங்குளம் ஆகிய 5 பொலிஸ் பிரிவில் மாவீரர்நாள் நினைவு நிகழ்வை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
இந்த ஐந்து பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தடையுத்தரவை திருத்திய கட்டளை ஆக்கி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணி கேசவன் சயந்தன் தலைமையில் சட்டத்தரணிகளான கணபதிப்பிள்ளை கணேஸ்வரன் வி எஸ் எஸ் .தனஞ்சயன், ருஜிக்கா நிதியானந்தராஜா , ஆகியோர் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து வாதங்களை மேற்கொண்டனர்.
வாதங்களைக் கேட்ட மன்று ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தடையுத்தரவை திருத்திய கட்டளை ஆக்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |









இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கையில் ‘தினமென்’ சதுக்கமும், ஐ. நா.வில் வீட்டோவும் 21 மணி நேரம் முன்

ரஷ்யாவின் அணு ஆயுத மிரட்டலை துச்சமாக மதித்து மற்றொரு நாடு எடுத்துள்ள துணிச்சலான முடிவு News Lankasri

ரஷ்யாவின் அடி மடியிலேயே கைவைத்த உக்ரைன்! சக்தி வாய்ந்த ராக்கெட் லாஞ்சரை தட்டிதூக்கிய வீடியோ News Lankasri

சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் க்ளிக்- செம வைரல். சூப்பர் ஜோடி Cineulagam

ஜேர்மனிக்கு பயணித்த கேரள இளம்பெண்ணை பாதி வழியில் திருப்பி அனுப்பிய விமான நிறுவனம்: காரணம் என்ன தெரியுமா? News Lankasri

38 வயதில் விளாடிமிர் புடின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண் இவ்வளவு சர்ச்சைக்கு பெயர் போனவரா? புதிய தகவல் News Lankasri

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் 3 நாள் பட்டய கிளப்பும் வசூல்- தமிழகத்தில் மட்டும் இவ்வளவா? Cineulagam
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022