முல்லைத்தீவு மதுபானசாலை விவகாரம்: அதிகாரிகளின் அசமந்த போக்கினால் மக்கள் விசனம்
முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட மதுபானசாலையை அகற்ற கோரி பிரதேச செயலாளர் ஊடாக
கலால் வரி திணைக்களத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டும் இதுவரை எவ்விதமான
நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என குறித்த பகுதி மக்கள் குற்றம்
சாட்டியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்பிலவு பகுதியில் புதிதாக சில்லறை மதுபானசாலை நிலையம் ஒன்று கடந்த ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி திறக்கப்பட்டது.
எதிர்ப்பு கடிதங்கள்
இதனால் குறித்த கிராம மக்கள், பொது அமைப்புக்கள், பாடசாலை இணைந்து எதிர்ப்பு தெரிவித்து பிரதேச செயலாளருக்கும் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அதனை அகற்றி தருமாறு கோரி கடிதம் ஒன்றினை கடந்த மாதம் வழங்கி இருந்தார்கள்.

அதனையடுத்து அரசாங்க அதிபராலும், பிரதேச செயலாளராலும் மக்களால் வழங்கப்பட்ட எதிர்ப்பு கடிதங்கள் இணைக்கப்பட்ட கடிதம் இலங்கை மதுவரி திணைக்களத்தினருக்கு அனுப்பப்பட்டும், இது வரையில் குறித்த மதுபானசாலையை அகற்ற எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என குறித்த கிராம மக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri