நாட்டில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்து: ஒருவர் பலி (Photos)

Police Accident Mullaitivu Hospital
By Yathu Mar 06, 2022 09:01 PM GMT
Report

கிளிநொச்சி

கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இரணைமடு வீதியில் அம்பாள்நகர் பகுதியில் மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இரணைமடு பகுதியிலிருந்து A9 வீதி நோக்கி பயணித்த ஐஸ்கிறீம் வியாபார ஊர்தியுடன் எதிரே பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த பத்மநாதன் சஞ்ஜீவன் எனும் 29 வயதுடையவர் உயிரிழந்துள்ளார். இவர் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

[

நாட்டில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்து: ஒருவர் பலி (Photos) | Mullaitivu Accident Police Hospital

நாட்டில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்து: ஒருவர் பலி (Photos) | Mullaitivu Accident Police Hospital

அத்துடன், பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியில் ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ் விபத்து சம்பவம் இன்று (06) இரவு 07.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

துவிச்சக்கர வண்டியில் பரந்தன் நோக்கி பயணித்த முதியவர் ஒருவரை பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரிகள் முதியவரை மோதித் தள்ளி விட்டு படுகாயம் அடைந்த முதியவரை அவ்விடத்தில் விட்டு தப்பி ஓட முற்பட்ட சமயம் அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த கிளிநொச்சி பொலிஸார் விபத்தை ஏற்படுத்தி தப்பிச் செல்ல முற்பட்டவர்கள் பொலிஸ் அதிகாரிகள் என்றும் அவர்கள் மதுபோதையில் இருந்த நிலையில் குறித்த விபத்தினை மூடி மறைக்க முற்பட்ட சமயம் பிரதேச மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது எனவும் இதன்போது அமைதியின்மை ஏற்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காயமடைந்த முதியவர் 1990 நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்து: ஒருவர் பலி (Photos) | Mullaitivu Accident Police Hospital

நாட்டில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்து: ஒருவர் பலி (Photos) | Mullaitivu Accident Police Hospital

நாட்டில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்து: ஒருவர் பலி (Photos) | Mullaitivu Accident Police Hospital

முல்லைத்தீவு 

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யுவதிகள் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குடும்ப தேவைக்கான பொருட்களுடன் இரண்டு துவிச்சக்கரவண்டியில் தனித்தனியாக பயணித்துக்கொண்டிருந்த யுவதிகள் மீது, பின்னால் பயணித்த ரிப்பர் மோதியுள்ளது.

இதன் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த பாடசாலை கல்வியை தொடரும் இரு யுவதிகள் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்களின் உதவியுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளின் பின்னர் வாகனத்தையும், சாரதியையும் கைது செய்துள்ளதாக தெரிவித்து, அதே சாரதியைக் கொண்டு வாகனத்தை எடுக்க முற்பட்ட போது கூடியிருந்த மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸ் உயரதிகாரி, குற்ற செயல் தொடர்பில் நீதியான விசாரணைக்குட்படுத்தப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படும் என வாக்குறுதி அளித்ததுடன், பிரிதொரு சாரதி ஒருவரின் உதவியுடன் வாகினத்தில் விபத்துடன் தொடர்புடைய சாரதியையும், ரிப்பர் வாகனத்தையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

12 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், கொழும்பு

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை, Toronto, Canada

14 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US