மு/தண்ணீரூற்று சீ.சீ.த.க பாடசாலையில் நடைபெறவுள்ள எழுத்தறிவுப்பெருவிழா
முல்லைத்தீவு - தண்ணீரூற்று சீ.சீ.த.க பாடசாலையில் எழுத்தறிவு பெருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் அனுசரணையில் இடம்பெறும் மாணவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
மேலும், போட்டி நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படவுள்ளதும் அவர்கள் பங்கேற்கவுள்ள கலை நிகழ்வுகளும் நாளைய தினம் (2024.08.06) நடைபெறவுள்ளதாக பாடசாலைச் சமூகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
போட்டி நிகழ்வுகள்
பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வானது 2024.08.06ஆம் திகதி அன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது.
சிறுவர்களின் செயற்பாடுகளில் ஆர்வமுடையவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலைச் சமூகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |